Wednesday 17 November 2021

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

 வ. உ. சிதம்பரம் பிள்ளை


வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவரது பங்களிப்பைப் பற்றி மேலுமறிய இந்த இணைபில் படிக்கவும்.

பிறப்பு: செப்டம்பர் 51872

பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம்தமிழ்நாடுஇந்தியா

இறப்பு: நவம்பர் 181936

தொழில்: வக்கீல்அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

வ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தார்.

குழந்தை பருவமும் சட்டத்துறையும்

அவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார்.

சட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் செயல்படும் பாணிகளில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அவரது தந்தை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர். ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல தருணங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்ததால், அவர் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்ற புகழ் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

செயல்மிகு அரசியலில் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ. சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங்கினார்.

கப்பல் நிறுவனம்

இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன்,  இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர்  முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.


கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு  இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.

தேசிய மனப்பான்மை

அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். இதன் நோக்கமாக அவர், திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இதனால், காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, நான்கு பேர் மரணம் அடைந்தனர். ஆங்கிலேய அதிகாரிகள், அவரது செயல்களுக்குத் தீவிரமாக கண்டனம் தெரிவித்தாலும், நாட்டின் ஊடக ஆதரவு கிடைத்ததால், அவரின் தேசிய உணர்வை அவர்கள் நாளிதழ்கள் மூலமாக விரிவாகப் பாராட்டினார்கள். ஆங்கிலேயர்கள், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முயற்சித்தாலும், நாட்டிலுள்ள இந்தியர்கள், சிறையிலிருந்து அவரை விடுவிக்க நிதி சேகரித்தனர். அச்சமயம், தென் ஆஃப்ரிக்காவிலிருந்த மகாத்மா காந்தியும், வ.உ.சியின் பாதுகாப்பிற்காக, மேலும் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பினார். தனது கைதுக்குப் பின்னர்,  அவர் கோயம்புத்தூரிலுள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்..

சிறையில் இருந்த அந்நாட்களில், மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் மற்ற குற்றவாளிகள் போல சிறையில் கடின உழைப்பில்  ஈடுபட்டார். அவரது இந்த கடின உழைப்பு, அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது,  அவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலைக்குப் பின், சிறை வாயிலின் முன்பு பெருமளவு தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எதிர்பார்த்த அவருக்கு அச்சம் விளைவிக்கிற அளவுக்கு அமைதி காத்திருந்தது. இது, அவருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால்,  அவர் ஏழ்மை நிலையை அடைந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பின்னர், சென்னையிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவரானார். 1920ல், அவர், இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் ஆயத்தமானார்.

இலக்கிய படைப்புகள்

அரசியல்வாதியாகவும், வழக்கறிஞராகவும் அவர் ஆற்றிய பணிகளைத் தவிர, அவர் ஒரு சிறந்த அறிஞரும் ஆவார். சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கிய அவர், 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அவர், ஒரு சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவர், தத்துவ எழுத்தாளாரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் பல படைப்புகளை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளையும் வெளியுட்டுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

அவர், 1895ல் வள்ளியம்மையை மணமுடித்தார். ஆனால், அவரது மனைவி 1901ல் இறந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர்  மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அவருடைய மூத்த மகன், தனது இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார். அவரது இரண்டாவது மகன், ஒரு அரசியல்வாதி. மூன்றாவது மகன், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றுகிறார். நான்காவது மகன், இன்னும் மதுரையில் வசித்து வருகிறார். அவரது மகள்கள் அனைவரும் சென்னையில் மணமுடித்து வசிக்கின்றனர். அவரது வம்சாவளிகள் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.


இறப்பு

ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர்  18, 1936அன்று விட்டார்.

நினைவஞ்சலி

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒருவராக நினைவு கூறப்பட்டவர், வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்கள். அவர், தமிழ்நாட்டில் இன்று வரையிலும், பலரால் மிகவும் நேசிக்கவும், கொண்டாடப்படுபவரும் கூட.

  • ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும் ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்றும் ‘கப்பல் செலுத்துகிற திசையைக் காட்டுபவர்’ என்ற பட்டங்களைப் பெற்றார்.
  • சுதந்திரத்திற்கு பின்னர், அவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் ‘வ.உ.சி போர்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • அவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.
  • செப்டம்பர்  5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை அவரின் பெயரில் வெளியிட்டது.
  • கோயம்புத்தூரிலுள்ள ‘வ.உ.சி பூங்கா’ மற்றும் ‘வ.உ.சி மைதானம்’ மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்புக் கூடமாகவும் இருக்கின்றது.
  • விடுதலைப் போராட்டத்தில், அவரது புரட்சிகரமான செயலுக்காக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வளாகத்தில் உள்ளே ஒரு ‘நினைவுச்சின்னம்’ அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு ‘வ.உ.சி பாலம்’ என பெயரிடப்பட்டது.
  • ‘கப்பலோட்டிய தமிழன் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’ வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு, 1961ல் தமிழ் படம் வெளியானது. அதன் முன்னணி பாத்திரமாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார்.

காலவரிசை

1872: செப்டம்பர் 5 ம் தேதி பிறந்தார்.

1895: வள்ளியம்மையை மணமுடித்தார்.

1901: அவரது மனைவி நோயால் இறந்தார்.

1905: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.

1906: நவம்பர் 12ஆம் தேதி அன்று தனது சொந்த கப்பல் நிறுவனமான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்’ துவக்கினார்.

1908: மார்ச் 12ஆம் தேதி அன்று ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

1908: ஜூலை 9ம் தேதி கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

1911: அவரது கப்பல் கம்பெனியான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ கலைந்தது.

1912: டிசம்பர் 12 ஆம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.

1920: கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் ஆயத்தமானார்.

1936: நவம்பர் 18ஆம் தேதி அன்று இறந்தார்.

Saturday 9 May 2020

இந்து சமய நூல்கள்


இந்து சமயம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்து சமயத்திற்கு வேதநெறி என்றும் பெயர் உண்டு.

இந்து சமயத்தின் அடிப்படை நூல் வேதம். வேதங்களில் அறிவாராய்ச்சிக்கு உகந்தவையும், எக்காலத்திலும் மாற்றவொண்ணாதவையுமான பேருண்மைகளும், தத்துவங்களும் கூறப்பட்டுள்ளன.

வேதங்களை இறைவன் ரிஷிகள் மூலமாக உலகிற்குத் தந்தார். பாரதநாட்டின் முற்கால ரிஷிகள் தங்கள் தவயோக பலத்தால் வேதங்களை அறிந்து உலகிற்குத் தந்தனர்.

வேதங்களை வியாசர் நான்காகத் தொகுத்தார். அவை ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வண வேதம்.

வேதங்களின் தத்துவம் மற்றும் வேத மதத்தின் சாரத்தை கொண்டிருப்பவை உபநிஷதங்கள். எல்லா இந்திய தத்துவ வகுப்புக்களும் இவைகளில் இருந்துதான் ஊக்கத்தையும் பலத்தையும் பெறுகின்றன.

பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் சமயங்களிலும் கலாச்சாரத்திலும் ஊடுருவி நிற்கும் முக்தி என்ற வாழ்க்கையின் அறுதி லட்சியம் இந்த உபநிஷதங்களில் இருந்து தோன்றியவையே. 

ரிக்வேதம்

இந்த வேதம் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான்: ஏகம் சத் விப்ர: பஹுதா வதந்தி.” அதாவது உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான். இருக்கும் அந்த ஒரு உண்மையை ஞானியர் பல பெயர்களைத் தந்து அழைக்கின்றனர்.

வேதத்தின் தத்துவம் இவ்வளவுதான். மாறிமாறிவரும் தனித்தனியான வடிவங்கள் அனைத்தும் அந்த ஒரே இறைவனுடைய பிரதிபலிப்புகள் என்பதுதான் நம் அடிப்படைக் கொள்கை.  

“இந்திரன், மித்திரன், வருணன் என்றெல்லாம் அழைக்கப்படுவது, உள்ளது, ஒன்றே. மகான்கள் அவரைப் பல பெயர்களிட்டு வழங்குகிறார்கள்,” என்கிறது ஒரு ரிக்வேத மந்திரம்.

இந்த வேதத்தில் வரும் இன்னொரு முக்கிய உபநிஷதம், ஐத்ரேய உபநிஷதம். இதில் பரமாத்மா அல்லது எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே ஆதியில் இருந்தார் என்று கூறுகிறது. அவருக்கு உலகத்தைப் படைக்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றியது. தன்னிடமிருந்த சக்தியால் இந்த உலகை அவர் படைத்தார். படைத்த எல்லாவற்றுக்குள்ளும் அவர் ஊடுருவி இருந்தார்.

யஜுர்வேதம்

இந்த வேதத்தில் வரும் ஈசாவாஸ்ய உபநிஷதம் ஆன்மாவின் இயல்பை விளக்குகிறது. யார் ஒருவர் ஆன்மாவை தனக்குள்ளேயும், மற்றொருவருக்குள்ளும் காண்கிறாரோ அவர் துன்பத்தில் இருந்தும் மாயையில் இருந்தும் விடுபடுகிறார்.

யஜூர்வேதத்தில் வரும் இன்னொரு முக்கிய உபநிஷதம், கட உபநிஷதம் ஆகும். இதில் நசிகேதன் என்ற சிறுவன் யமராஜாவிடம் (மரண தேவன்) சென்று, மரணத்தின் மர்மத்தை தெரிந்துக் கொண்டு, ஆன்மீக ஞானத்தை பெறுகிறான்.

இந்த வேதத்தில் வரும் ஸ்வேதாஸ்வதர உபநிஷதம், தியான யோகமும் அதன் வழிமுறைகளான மனக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு, ஆசனம், பிராணாயாமம் (அதாவது மூச்சுக் கட்டுப்பாட்டின் மூலம் பிராண சக்தியை ஒழுங்கு படுத்துதல்), மற்றும் யோகத்தின் பலன்களையும் விளக்குகிறது.

சாமவேதம்

இதில் வரும் கேன உபநிஷதம், இறைவனை அடைவதற்கு தவம், தமம் (சுயக்கட்டுப்பாடு), கர்மம் (சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள செயல்கள்) ஆகிய ஒழுக்கமுறைகள் அடிப்படைத் தேவைகள் என்று கூறுகிறது.

அதர்வ வேதம்

இதில் வரும் மாண்டூக்ய உபநிஷதம் பிரணவம், ஆன்மா, பிரம்மன் ஆகிய தத்துவங்களை விளக்குகின்றது. அழியாத உண்மையான பிரம்மத்தில் அழகிய சின்னமாக இருப்பது பிரணவம். பிரணவ தியானம் கடைசியில் ஆன்ம அனுபூதியை தரும். இறுதியில் ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றே என்று இந்த உபநிஷதம் உறைக்கிறது. 

முண்டக உபநிஷதம் இறை அனுபூதியை அடைய செய்யவேண்டிய ஆன்மீக சாதனைகள் பற்றி விளக்குகிறது. ’ஓம்’ என்ற பிரணவத்தின் மூலம் பிரம்மத்தைத் தியானம் செய்ய வேண்டிய முறையை வில்-அம்பு உதாரணம் மூலம் அழகாக எடுத்துரைக்கிறது. இத்தியானம் ஒருவர் தனக்குள்ளே ஆன்மா அல்லது பிரம்ம அனுபூதியை அளிக்கிறது. ஒருவரைக் கட்டுப்படுத்தியிருந்த அறியாமை என்ற பந்தங்கள் இதனால் அழிகின்றன.

"வாய்மையே வெல்லும்" என்ற புகழ்பெற்ற மொழி இந்த முண்டக உபநிஷதத்தில்தான் வருகிறது.

இந்து சமயத்தில் கடவுள் கொள்கை

கடவுள் என்பவர் யார்? "யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ" அவரே கடவுள்.

கடவுள் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரமானவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன்
இந்து சமயம் கடவுளை பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றது. பரம்பொருள், பரமாத்மா, இறைவன், தெய்வம், தேவி, என்று பல சொற்கள் கடவுளைக் குறிக்கின்றன.

கடவுள் ஒருவர் தான். அவருக்கு பல பெயர்களும் பல உருவங்களும் உள்ளன.

ஒரே பரம்பொருளைக் குறித்துத்தான் இப்படிப் பலவிதமான உருவங்களும் வழிபாடுகள் உள்ளன.

ஒவ்வொரு தெய்வ வடிவமும் அந்தப் பரம்பொருளைப் பற்றிய ஓர் அம்சத்தை விளக்க வந்தது. ஒவ்வொரு வடிவமும் ஏதோ ஒரு வகையில் நம் சிந்தனையை இறைவன்பால் திருப்புகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்போதுதான் நாம் எந்தக் குழப்பமும், பயமும் இல்லாமல் ஆன்மீக வாழ்க்கையைத் தொடரலாம்.

ஏராளமான ரிஷிகளும், மகான்களும் தங்கள் இதயத்தில் தோன்றிய பரவசமூட்டும் காட்சிகளைக் கண்களாலும் கண்டனர். ஆகவே இந்து சமயத்தின் தெய்வ வடிவங்கள் எல்லாம் மெய்யானவை. அவை வெறும் சின்னங்கள் அல்ல. முயன்றால், நாமும் அத்திரு உருவங்களை காணலாம்.

ஏகம் ஸத் விப்ரா பஹூதா வதந்தி

இந்து சமய முக்கியமான கொள்கை இது. ஏகம் ஸத் என்றால் பரம்பொருள் ஒன்று என்று பொருள். விப்ரா பஹூதா வதந்தி என்றால் பண்டிதர்கள் பலவிதமாக கூறுகின்றனர் என்பது பொருள்.  

இறைவன் எல்லையற்ற சக்தி உடையவர். அவரால் இயலாதது என்பது இல்லவே இல்லை. பக்தர்கள் எந்த வடிவத்தில் காண விரும்புகின்றனரோ அந்த வடிவத்தில் அவர் காட்சியளிப்பார். அவ்வாறே பல பக்தர்கள் கண்ட வடிவங்களையே நமக்கு வெளிப்படுத்திச் சென்றுள்ளனர். ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மட்டும் தான் கடவுள் வருவார் என்பது அவரது எல்லையற்ற சக்தியுடைமைக்கும், எல்லையற்ற கருணைஉடைமைக்கும் இழுக்காகும். அத்தகைய சக்தி குறைந்தவராக, ஒரு பக்கச் சார்புள்ளவராகக் கருதுவது கடவுள் கொள்கைக்கு எதிரானது ஆகும்.

மேலும் எந்த வடிவிலும் இறைவனை வழிபடலாம் என்பதே உலகில் அமைதி நிலவச் செய்யும் கொள்கையாகும். ஒரு குறிப்பிட்ட வடிவத்தில்தான் வழிபடவேண்டும் எனக் கூறுவது சண்டை, சச்சரவு, போட்டி, பொறாமைகளுக்கே வழிவகுக்கும்.

இக்காரணங்களால் தான் உலகத்து அறிஞர்கள் அனைவரும் ஏகம் ஸத் விப்ரா பஹூதா வதந்தி என்ற இந்து சமயக் கொள்கையைப் போற்றுகின்றனர்.

இறைவனுக்கு பலவடிவங்களும், பல நாமங்களும் உள்ளன. அவரவர் விரும்பும் நாமத்தில் அழைக்கின்றனர். அவை அனைத்தும் ஒரே இறைவனைக் குறிப்பனவையே.

இவ்வுலகில் எந்த ஒரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர் உண்டு எனக் கூற இயலாது. ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயர் கூறி அழைப்பார்கள்.

உதாரணமாக, தண்ணீர் என தமிழர்கள் கூறுவதைகே ஜலம், பானி, வாட்டர் என் சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் பேசுபவர்கள் கூறுவர். ஒருவர் கூறுவதே சரி, மற்றவர்கள் கூறுவது தவறு எனச் சொன்னால் அது அறிவுடைய கூற்று ஆகாது. இவ்வாறு இவ்வுலகின் எந்தப் பொருளுக்கும் இதுதான் நாமம் எனக் கூற இயலாது. இதுவே இவ்வாறெனில் இப்பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனை ஒரு பெயருக்குள் அடக்கிவிடலாம் என்பது அறிவுடைமை ஆகாது.

இதனால் தான் நம் ஞானிகள் ஓருருவம், ஓர் நாமம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி... எனக் கூறுகின்றனர்.

எனவே வேதக் கொள்கையான இக்கருத்திற்கு மாறாக ஓர் உருவம், ஓர் நாமம் மட்டுமே கடவுளுக்கு உண்டு எனக் கூறும் எந்த சமயமும் நமக்கு ஏற்புடையதல்ல.

எனவே உலகம் போற்றும், உலகில் அமைதியை நிலவச் செய்யும் ஏகம் ஸத் விப்ரா பஹூதா வதந்தி என்ற சிறந்த கொள்கைதனைப் புரிந்து அதன்படி வாழ்ந்து உய்வடைவோமாக!

பல கடவுளர்கள் என்ற தோற்றத்திற்கு ஆதாரம் மும்மூர்த்திகளைப் பற்றிய பக்தி நெறிகள். மும்மூர்த்திகள் என்றதும் பிரம்மா, விஷ்ணு, சிவன், அவர்களுடைய தேவியர் என்பது நிலையாகும். மும்மூர்த்திகளும் ஒரே கடவுளின் மூன்று முகங்கள் என்றும் கொள்ளலாம். அந்த ஒரே கடவுளைச் சர்வேசுவரன் என்றும் சொல்வோம்.

அதற்குப் பிறகு கணேசரும், முருகனும் வருகிறார்கள். இவர்களும் அந்தச் சர்வேசுவரனுடைய வேறு முகங்கள், வடிவங்கள், அம்சங்கள் என்றெல்லாம் சொல்லலாம்.

அடுத்த நிலையில், திக்பாலர்கள் என்றும் லோகபாலகர்கள் என்றும் அழைக்கப்படும் தெய்வங்கள். இவர்கள் உலகை எல்லா திசைகளிலும் காத்து நமக்குப் பல நலன்களை அருள்பவர்கள். இந்திரன், வருணன், அக்னி போன்ற வேத கால தெய்வங்கள் இந்த வரிசையில் அடங்குவர். இந்த உருவங்களும் அந்த ஒரே பரம்பொருளின் சக்திகளைக் குறிக்கின்றன.

இதற்குப் பிறகு நான்காவது நிலையில் இருப்பது கிராமதேவதைகள், சிறு தெய்வங்கள்.    இவ்வடிவங்களும் ஓரளவுக்கு அந்தப் பரம்பொருளின் சில அம்சங்களைச் சித்தரிக்கின்றன. புயல், நெருப்பு, மின்னல், சூறாவளி, எரிமலை இப்படிப் பலப்பல வகைப்பட்ட இயற்கை சக்திகளை இறைவனின் அம்சமாகக் காணுவது வழக்கம்.

இறைவனுக்குப் பல்வேறு திருநாமங்கள் உள்ளன. அவருடைய எண்ணற்ற உருவங்கள் மூலம் அவரை அணுக இயலும். எந்தப் பெயர் மற்றும் உருவம் மூலம் இறைவனை நீ வழிபட்டாலும், அவற்றின் மூலம் உன்னால் அவரை அடைய முடியும்,” என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார், "நீ எந்த உருவத்தில் என்னை வழிபட்டாலும், எந்த விதத்தில் என்னை அண்டி வந்தாலும் நான் உனக்கு அருள் செய்வேன்." இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவத்தை விளக்க இந்தச் சொல்லே போதும். எல்லோருக்கும் எல்லாமாக இருக்கிற அந்த ஆண்டவன் பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் அவர்களுக்குக் காட்சி தந்து அருள் செய்வான். அன்போடு அவனிடம் அவர்கள் எதையும் கேட்கலாம்.

பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்குமே மூன்றுவித வெளிப்பாடும், உருவமும் உண்டு. அவை:

  • முதலாவது - மூர்த்தி, அதாவது விக்கிரமாக செதுக்கப்படுவது. பெரும்பாலும் விக்கிரங்களை நாம் வீட்டிலோ கோவிலிலோ வைத்து வழிபடுவோம்.
  • இரண்டாவது - யந்திரம். யந்திரதை தகட்டில் அல்லது காகிதத்தில் வரையப்படுகிறது.
  • மூன்றாவது - மந்திரம். மந்திரதை மனத்திற்குள் அல்லது உரக்கமாக சொல்லலாம். ஒவ்வொறு தெய்வதிற்கும் ஒரு தியான சுலோகம் உண்டு. அதை உச்சரித்தால், அந்தத் தெய்வம் இதயத்தில் எழுந்தருளும்.



மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...