Sunday 8 March 2020

சரியான வழிதடத்தை நோக்கி செல்வோம்

சமீப காலமாக வலைத்தளங்களில் இந்து சமயத்தை குறித்து அவதூறான கருத்துக்களை வெளிப்படுத்தும் கணோலி அதிகமாக பரவி வருவதை நான் கண்டேன். குறிப்பாக இந்தியாவை சேர்ந்த திராவிட கழகத்தை சார்ந்த அரசியல் தலைவர்களுடைய பதிவுகளே, அதிகமாக காணப்பட்டு வருகிறது. ஒரு புறம், பக்தி மார்க்கத்தில் இருந்து கொண்டு ஒருவர் இந்து சமயத்திற்கு இன்னல் விளைவித்து கொண்டு வருகிறார்; மற்றொரு புறம், இறைவனையே தூற்றி பேசுவார் பின்னர் அவரையே எங்களது பாட்டன், அவனன்றி எதுவும் இல்லை என்று நா கூசாமல் பேசுவார் ஒருவர்.

இவர்களையெல்லாம் கடந்து ஆதி மூலன் ஒருவனை தவிர மற்றவர் எல்லாம் சிறு தெய்வத்திற்கு சமமானவர் என்றும் சொல்வர். திருமுறைகள் தான் எங்கள் வாழ்வு என்பர். பிறகு நால்வர் காட்டிய வழியை மட்டுமே பின்பற்றுவோம் என்பார். இவர்களது பேச்சை கேட்க இருக்கு ஆனால் இல்லை, என்ற விதாண்ட வாத பேச்சுக்கு ஒப்பாக அமைந்துள்ளது.
திருமுறைகளை சைவ சமயத்தில் சேக்கிழார் பெருமான் பன்னிரண்டாக பிரித்து நமக்கு அருளியுள்ளார். அவற்றில் விநாயகர், முருகன், சக்தி, பெருமாள் என சன்மத கோட்பாட்டிற்கு இணங்கிய வண்ணம் தெய்வங்களை குறிப்பிட்டு அருளாளர் பெருமான்கள் நமக்கு அருளியுள்ளனர். அதை மறுக்க இயலுமா?

பரம்பொருள் என்பவர் ஒருவர்தான் என்ற கருத்தை கட்டாயம் எடுத்து கொள்ளத் தான் வேண்டும். ஆயினும், அவரவருடைய நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை பதிய வேண்டாம் என்பதே என்னுடை வேண்டுகோள் ஆகும். நமக்குள் நாமே தெய்வங்களை பிரித்து சண்டை போடுவதற்கு இது சோழர்கள் காலம் அல்ல. உலகம் நவீன மயமாகி போய் கொண்டிருப்பதை சற்று சிந்திக்கவும் வேண்டுமே என்றுதான் சொல்கிறேன். எம்முடைய இப்பதிவு யார் மீதும் கொண்டிருக்கும் தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்துவதாக இல்லை.


நமது நாட்டில் அவ்வப்போது எழக் கூடிய மதமாற்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும். இப்படிப்பட்ட சூழலில் சமய அறிவு குன்றியிரக்கும் பாமர மக்களிடத்தில் குழப்பத்தை உண்டு செய்வது தவறு என்ற என்னுடைய தரப்பு கருத்தை பதிக்கிறேன். அதுமட்டுமல்லாது நாம் ஒரு இந்துவாக, சனதன தர்மத்தை கைப்பற்றியிருக்கும் சைவராக, வைஷ்ணவராக தாழ்மையோடு கேட்டு கொள்வது என்னவென்றால், சமூக வளைத்தலஙகளில் நம்முடைய சமயத்தை குறித்து வெளிவரும் அவதூறான காணொலி மற்றும் கருத்துக்களை பகிராமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். காரணம் பல்லின மக்களும் உலாவி வரும் இந்த சமூக வளைத்தலத்தில் நம்முடைய சீர்கெடுவது குறித்த பதிவுகளால் நமக்கு நாமே அவலநிலையை கொண்டுவருவதற்கு சமானமாக அமைகிறது. ஆகவே வேண்டி கேட்பது ஒன்றே ஒன்று தான், நல்ல பதிவுகளையும், பயன்மிக்க கருத்துக்களையும் பதிந்தால் சிறப்பாக இருக்கும் என்பதனை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.

விருச்சத்தின் நிழலில்,
விக்ரமன் பொன்ரங்கம்

Friday 6 March 2020

திறமைக்கு மதிப்பளியுங்கள்!


சமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்படம் என்னை நெகிழ வைத்ததோடு, உண்மையும் வரக் கூடிய காலங்களில் நம்முடைய இளைய சமூகம் சீர்கேட்டு பிரச்சனைக்கு ஆளாகமல் சரியான வாழ்க்கையை தேர்வு செய்து செல்ல வழிகாட்டுதலாக அமைந்திருந்த திரைக்கதை. சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் அவர்களது இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஹிரோ. கல்வியில் சிறந்த அடைவுநிலை பெறாது போகும் இளம் மாணவர்களுக்குள் உள்ள தனித்திறனை வெளிப்படுத்தி அவர்களாலும் முடியும் என்ற ஊக்கத்தை கொடுக்கும் வகையில் அமைந்த கதை. திரைப்படத்தில் நாம் கண்ட காட்சிகளை ஒரு தரப்பில் சிந்தித்து பார்த்தால் நிஜத்தின் நிழல்களாகவே தோன்றும். 

இது போன்ற கதை அம்சத்தோடு காலத்திற்கு ஏற்ப ஒரு திரைப்படம் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. அவற்றில் சில நண்பன், தோனி என்ற படங்கள் திரைக்கு வந்த சில காலம் வரை தான் அதன் பாதிப்பு நம்மை தாக்கியிருக்கிறது. பின்னர் படம் பழைமையடைந்ததும் நாமும் வழக்கம் போலவே வேதாளம் முறுங்க மரம் ஏறிய கதையாக போய்விடுகிறோம். திரைப்படங்கள் பாதிப்பால் எத்தனையோ தீய பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு நீங்காது உள்ளது; ஆனால் நல்லவையை எடுத்து சொல்லக் கூடிய பாதிப்பு நமது செவிகளுக்கும் அறிவுக்கும் எட்டாமலே போய்விடுகிறது.
எத்தனையோ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் திறமையை கண்டறியாது, 

படி படியென்று பாடங்களிலும் தேர்வுகளிலும் மட்டுமே தங்களது பிள்ளைகளின் கல்வி திறனை மதிப்பிடு செய்கின்றனர். ஆனால் கல்வியால் சிறந்த அடைவு நிலையை கொண்டு வர முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களுக்குள் விளையாட்டிலோ, தொழில் திறனிலோ, இசை, நடனம், வரைதல் போன்ற கலைச் சார்ந்த துறைகளிலோ தனி திறமைகளானது ஒழிந்திருக்கும். அவற்றில் ஆர்வமானது மிகுதியாகவே காணப்படும். 
பெற்றோர்கள் ஒரு நிமிடம் தங்களை நீதி வழக்கு கூண்டில் நிறுத்திக் கொண்டு பின்வரும் கேள்விகளுக்கு விடையளித்து பாருங்கள்,

1. என்னுடைய மகன் / மகள் உடைய தனி திறமையானது எது?
2. என்னுடைய பிள்ளைகளிடத்தில் என்றாவது நான் நண்பனாக மாறி மனம் விட்டு பேசியது உண்டா?
3. எப்போதாவது நான் அவர்களை ஊக்குவித்துக் கொண்டே இருந்தது உண்டா?
4. என் பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து செயலாற்றியது உண்டா?

இதன் விடைகளே, உங்களது பிள்ளைகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை மதிப்பீடு செய்யும். காலங்கள் மாறி கொண்டு வருகிறது, இப்பொழுதெல்லாம் பெற்றோர் முன்பை போல இல்லை, தவறாக குறை கூறி இது போன்ற பதிவுகளை பதியாதீர் என்று சொல்லாதீர்கள். காரணமில்லாமல் இந்த பதிவினை நான் பதியவில்லை. காலங்கள் மாறி வரலாம். ஆனால் சிந்தனை மாற்றங்கள் மட்டும் இல்லாமலே போய்விட்டதே.

இன்று பள்ளிகளில் ஒழுக்கப் பிரச்சனைகள் வருவதற்கு காரணம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடத்தில் மனம் விட்டு பேசாது போனதே காரணமாகவுள்ளது. தேர்வு என்பது ஒரு காகித மதிப்பிடே, அதற்கு எவருடைய திறமையை காண இயலாது. வாழ்க்கையில் வெற்றி பெற கல்வியறிவு மட்டும் போதாது, திறமையென்பதுவும் அவசியம். 
தற்சமயம் SPM / STPM தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களை மட்டுமே பாராட்டி கொண்டிருக்கும் இந்த ஊடகத்துறை சிறந்த அடைவுநிலை பெற்ற மாணவர்களையோ, அல்லது சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கோ ஊக்குவிப்பு வழங்க தவறிவிட்டது.  பெற்றோர்கள் இந்த தருணத்தில் தங்களது பிள்ளைகளுக்கு ஆறுதலாகவும் முழு பலமாகவும் இருந்து அவர்களுக்கு சிறந்த வழிக்காட்டுதலை வழங்க வேண்டும் என்பதே இந்த பதிவில் என்னுடைய ஆழ்ந்த கருத்தாகும். 

அப்துல் கலாம் ஐயா அவர்கள் இந்தியாவில் பிறந்த இளைஞர்களுக்கு மட்டும் தம்முடைய கருத்துக்களை பதிவு செய்யவில்லை. உலகெங்கும் பறந்து கிடக்கும் தமிழின மக்கள் யாவருக்குமே பதிவு செய்வித்த கருத்தாகும். 
ஆக சிறந்த சமுதாயத்தை உருவாக்க இன்றே விதைகளை விதைப்போம்.

விருச்சத்தின் நிழலில், 

விக்ரமன் பொன்ரங்கம்
07/03/2020

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...