Friday 25 August 2017

No conversion / ஏன் இந்த மாற்றங்கள் தோழா!

ஏன் இந்த மாற்றங்கள் தோழா!

எவ்வளவு தான் விஞ்ஞானத்தால் நாம் உயர்வு பெற்றுந்தாலும் இன்னும் மெய்ஞ்ஞானத்தால் தெளிவு பெறமலே உள்ளோம் என்பது இன்றைய நடைமுறை வாழ்க்கையில் தினம் தினம்  கண்ணெதிறே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். இதற்கு பிறரை குறை கூறுவதை விடுத்து சற்று சிந்தித்தோமானால் புரியும். தவலை எப்படி தன் வாயால் கெடும் என்பரோ அப்படியே நாம் நம்மாலேயே கெடுகிறோம். இத்தொடரில் நான் முக்கியத்துவம் கொடுத்து பேசுவது மதமாற்ற பிரச்சனையை குறித்தே.
இன்று மலேசிய திருநாட்டை பொறுத்த வரையில், மதமாற்ற பிரச்சனைக்கு விடிவில்ல புதிராக தான் உள்ளது. ஒருமுறை நமது தாய் மதத்தை விட்டு மாறிவிட்டோம் என்றால் மீண்டு வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அவளநிலையில் உள்ளனர். நமது இந்து சமயம் என்பது முத்த சமயங்களில் ஒன்று. கல் தோன்ற மண் தோன்ற காலத்தின் மூத்த மொழி தமிழ் மொழி என்று தமிழை உயர்த்தும் போதே நமது சமயமும் மூத்தது தான் என்று தெரிய வருகிறது.
சுதந்திரத்தை அள்ளி கொடுத்த சமயம். எல்லாவுயிர்களிலும், எல்லா இடங்களிலும், நிக்கமற இறைவன் நிறைந்துள்ளான் என்று உரக்க சொன்ன மதம். கலைகளிலும் சமயத்தை புகுத்தியது இந்து சமயம். குடும்பத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் நமது இந்து மதம். நீர், காற்று, நெருப்பு, நிலம் மற்றும் ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களிலும் இறைவனை பார்த்தது நமது இந்து மதம்.
எத்துனை பெருமை, புகழ், வியக்கத்தக்க வைக்கும் சம்பவங்கள், வரலாற்றில் மீண்டும் படைக்க முடியாத கலை, கட்டிடங்கள், பாரம்பரியங்கள். எல்லாவற்றிலும் அறிவியலை புகுத்திய பண்பாட்டு சடங்கு முறைகள், மருத்துவ குணதிசயங்கள். ஒரே ஒரு வரியில் அடக்கிட முடியாத கடல். மூழ்கினால் மீள முடியாத ஆளம்.
ஆக இத்துணை பெருமைகளை கொண்ட சமயத்தில் பிறந்து முழுமையாக கற்று தெளியமல் மதம் மாறுவது எவ்வளவு கேவலம் தெரியுமா? மத மாற்றம் என்பது நாம் நம்மை பெற்ற தாயை அல்லது நமது சகோதரியை விலைக்கு விற்பதற்கு சமமான ஒரு கேவலமான செயலாகும். இவ்வளவு கொச்சையாக குறிப்பிட காரணம் வேதனையின் வெளிப்பாடே.
குரு வழிப்பாடு என்ற பெயரில் பண மோசடி, வழிபாடு என்ற பெயரில் அர்த்தமற்ற பிரார்த்தனைகள், என்று நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கிறோம் என்பதனை இன்னும் உணரமலே போய் கொண்டிருக்கிறோம்.
மதமாற்றம் செய்யப்படுவதன் நோக்கம் நம்மை மிதித்து அவர்கள் ஓங்கி நிற்கவே. மேலும், நமது ஏழ்மையை பிறர் பயன்படுத்தி லாபத்தை பார்க்கவும் இச்சம்பவங்கள் நடைபெறுகிறது. இதற்கு அவர்களை மட்டும் தவறு சொல்வது சரியில்லை. நமக்கும் பங்கு உண்டு என்றே சொல்வேன். காரணம் பிற மதத்தினர் நம்மை பொது இடங்களில் சமய கலை கலச்சார நிகழ்வுகளில் படம் எடுத்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் முன்னிலையில் நமது அன்பு வழிப்பாட்டு முறைகளும் விஞ்ஞானமிக்க சடங்கு முறைகளும் தென்படாமல், அகோர ஆட்டங்களும், கவரச்சி மிக்க காட்சிகளும், நமது சமயத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கும் வகையிலான காட்சிகளுமே தெரிகிறது. இதையே காரணமாக கொண்டு மத போதகர்கள், பிரச்சாரகர்களை அதிகப்படுத்தி மத மாற்றத்தை செய்ய துண்டுதல் செய்கிறர்.

ஆக நாம் நமது சமயத்தின் புனிதத்தை ஒரளவு தெரிந்து வைத்திருந்து இந்துவாக பிறந்தால் இந்துவாகவே மடிய வேண்டும் என்ற உறுதியோடு இருந்தால் எவரும் நம்மை மதமாற்றம் செய்ய துணிய மாட்டார்கள். இறைவழிப்பாட்டில் உறுதியும், சமயத்தின் மீதுள்ள அக்கறையுமே நமக்கு இறுதி வரை துணை புரியும்.  இப்பிரச்சனைகளை கழைய நமது பிள்ளைகளை சிறு வயது முதல் சமயத்தின் மீது அக்கறை கொள்ள செய்தல் அவசியம். ஆலயங்களுக்கு செல்லும் பழக்கத்தையும் சமய சொற்பொழிவுகளில் கலந்து கொள்வது, அன்பான வழியில் இறைவழிபாடு செய்வது போன்றவற்றில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளுதல் அவசியம். விதைப்பதை சரியாக விதைத்தால் அறுவடை செய்யும் காலத்தில் நல்ல பயனை பெறலாம். இதற்கு முன் நாம் நமது சமயத்தில் செய்ய தவறியவற்றை இப்பொழுது கூட செய்ய துவங்களாம். தடுப்பதற்கு யாருமில்லை.

Thursday 3 August 2017

ஆலயத்தில் தமிழ் வேதத்திற்கு தடையா?


ஆலயம் என்பது தமிழர்களின் பண்பாட்டு கலைக் கூடகங்களில் ஒன்றாக போற்றப்படுபவை. நமது முன்னோர்கள் மக்கள் நலனுக்காக செய்து வந்த காரியங்களின் துவக்கமே ஆலயங்கள் தான். மேலும் சொல்லப் போனால், கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று சொன்னதற்கு இதுவும் ஒரு காரணமாக தான் அமையும். 
சமயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆலயம் அமைக்கப்படவில்லை. பொது மக்களின் வாழ்வியலுக்கும் பயனலிக்கும் நோக்கத்திலே சிற்பங்களாகவும், வழிப்பாட்டுகள் மூலமாகவும் சூட்சமமாக சொல்லி சென்றனர். அதுமட்டுமல்லாது தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் ஆலயங்கள் பல வகையில் பாடுபட்டுள்ளது என்பதில் எந்த காலத்திலும் மறக்கலாகாது.
அப்படியிருக்கும் பட்சத்தில் இன்று அதே ஆலயங்களில் தமிழால் வழிப்பாடுகள் செய்ய ஒரு குறையாகவே உள்ளது. அதுமட்டுமல்லாது தமிழால் பூஜைகள் செய்யும் போது பலரும் அதன் மகிமை உணராது தங்களது வீட்டு பிரச்சனைகளில் முக்கியத்துவம் வழங்கி இன்றும் மூடர்களாய் உள்ளனர். இப்பதிவின் நோக்கம் சமஸ்கிருத மொழியை சாடுவதல்ல. சமஸ்கிருதத்தில் உள்ள மந்திரங்களுக்கு தரும் மதிப்பை தமிழ் வேதம் என போற்றப்படும் திருமுறைகளுக்கும், திருப்புகழுக்கும் தர மறுக்கின்றனர் என்பதே இப்பதிவின் குற்றச்சாட்டு. ஒவ்வொரு ஆலயத்திலும் விஷேச பூஜை நேரத்தில் சமஸ்கிருத மொழியால் பூஜைகள் செய்யும் போது தமிழ் பாமாலை ஒதுவதற்கும் இடமுண்டு. இதனை பலரும் அறிந்த ஒன்று தான் ஆனால் யாரும் அதனை சரியாக பின்பற்றவில்லை என்பது தான் உண்மை.
தமிழ் பாமாலை என்று குறிப்பது திருமுறைகளை தான். சேரன். சோழன், பாண்டியன் காலங்களில் திருமுறைகள் பன்னிரெண்டையும் ஒதியே வழிப்பாடுகள் செய்யப் பெற்றன. அதன் பின், காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்றவாறு பூஜைகள் செய்யப்பட்டது. அதில் பன்னிரெண்டு திருமுறைகளாக ஒதப் பெற்ற திருமுறை பாடல்களை ஐந்தாக குறைத்து பஞ்சபுராணம் என்ற பெயரில் ஒதினர். பஞ்சபுராணம் என்பவை தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரிய புராணம் என்று வகுத்து கொண்டு ஒதினார்கள். தமிழ் மொழியால் பாடப் பெறும் இத்திருமுறைகள் இறைவனாகவே கேட்டு கொண்டதாகும். இதற்கு சான்று சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றில் சுந்தரரை இறைவன் தடுத்தாட் கொண்ட போது நம்பியரூரனை சுந்தர தமிழால் பாட்டிசைக்க சொன்ன வரலாறு. அதுமட்டுமின்றி, திருநாவுக்கரசர் சொல்கிறார்
"சலம்பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன்"
என்றும் திருஞானசம்பந்தர் தமது திருபதிகங்களில் தம்மை தமிழ்ஞானசம்பந்தன் என்றே கூறிப்பிட்டும் கொள்கிறார்.
திருமுறையா அல்லது சமஸ்கிருதத்தில் உருவான மந்திரங்களா என்று ஒப்பிடுகையில் திருமுறைகள் தான் முன்னிலை வகிக்கும். காரணம் மந்திரங்களின் மூலம் அற்புதங்கள் பல நடந்துள்ளதற்கான சான்று ஒன்று கூடயில்லை. சமஸ்கிருதம் என்பது தேவ பாட்ஷை இறைவனிடம் பேச உதவும் மொழி. ஆனால் தமிழ் வேதங்களோ அவனை உளம் குளிர்விக்கும் தேவமிர்தம். மந்திரங்களை குற்றம் சாட்டுவதற்காக சொல்லவில்லை, திருவாசகத்தில் சொன்னது போல்
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவப்புரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து"
என்று நாம் சொல்லும் மந்திரங்களாகட்டும், பாராயண தோத்திரங்கள் ஆகட்டும் அவற்றின் பொருளை உணர்ந்து பாடுவதால் தான் இறைவனின் பேராற்றல் பரிபூரணமாக கிடைக்கும். பாட்டின் பொருள் தெரியாது ஏடுகளில் உள்ளதை படித்துவிட்டால் மட்டும் போதாது என்பதனை நன்கு தெளிவுபடுத்தி கொள்ளுதல் அவசியம். ஆனால் திருமுறைகள் ஆகட்டும் திருப்புகழாகட்டும் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தான் அமையப்பட்டுள்ளது. எழில் மிகு தமிழால் மென்மையான வார்த்தைகளால் வருணித்து உள்ளோம் நெகிழ்ந்து அருளியவை. உள்ளம் உருகி ஒதினால் கலங்காத கல் நெஞ்சும் கறைந்து போகும்.
சொல்ல சொல்ல அடக்கத்தில் இல்லாத பேறுகளை பெற்றவை தான் நமது தமிழ் வேதம். அரசர்கள் காலங்களில்  இத்தமிழ் மறைகளை ஒதக் கூடியவர்களை ஒதுவார் என்று பணிவோடும் மரியாதையாகவும் கூறுவர்.  பல சுபக்காரியங்கள் இவர்களை முன்னிலைப்படுத்தியே நடத்தப்படுவதும் உண்டு. ஆனால் இன்று நமது நாட்டை பொருத்த வரையில் ஒதுவார்களுக்கு பஞ்சமாகிய நிலையில் உள்ளன. அதுமட்டுமல்லாது, பல ஆலயங்களில் திருமுறைகள் ஒதப்படமலே பூஜைகள் நடந்த வண்ணம் உள்ளது. அப்படியே ஒதப்பெற்றாலும் ஆலய குருக்கள் சிலர் அவர்களை இரண்டு அல்லது மூன்று பாடல்களை மட்டும் பாட சொல்லி கால அவகாசம் கொடுக்கின்றனர். காரணம் பொது மக்களால் அவ்வளவு நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்ய முடியாதாம். இப்பொழுதெல்லாம் திருமுறைகள் இறைவனுக்காக பாடப்படவில்லை மக்களுக்காக அவர்களின் விருப்பத்திற்காகவே பாடப்படுகிற நிலை! எத்துணை கேவலம். நம்மால் வழிப்பாட்டிற்க்கும் நேரத்தை ஒதுக்க முடியாத நிலையா?
வெள்ளம் வரும் முன் தான் அணை போட வேண்டும் வந்த பின் போட்டு பயனில்லை. இதனை இங்கு கூறிப்பிட காரணம் துன்பம் வந்த பின் இறைவனிடம் முறையிடுவதை விடுத்து அவன் அருளால் கிடைக்கப் பெற்ற நலத்தோடு இருக்கும் போதே நன்றி விசுவாசத்தை காட்ட வேண்டும்.
ஆக ஆலயங்களில் திருமுறைகள் ஒதப்படுவதை ஒவ்வொரு பக்தர்களும் முதலில் உறுதி செய்து கொள்வது அவசியம். அதற்கு முன் நாம் பயிற்சி பெற்ற மாணவராக இருத்தல் வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சமயத்தை போதிக்கவும், திருமுறைகளை கற்றுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். குடும்பத்தோடு ஆலயத்திற்கு சென்று இறைவன் சன்னதிக்கு முன்னின்று அவருக்கு உரியப் பாடல்களை ஒதிப் பிரார்த்திக்கவும் செய்ய வேண்டும். ஆலய உறுப்புனர்கள் தங்களது ஆலய பூஜை காலங்களில் பஞ்சபுராணம் ஒதுதலை கட்டாயப்படுத்துதல் வேண்டும். சிவன் ஆலயமாகயிருந்தால் பஞ்சபுராணமும், முருகன் ஆலயமாகயிருந்தால் பஞ்சபுராணத்தோடு திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் அநுபூதி ஒதுதலையும், அம்மன் ஆலயங்களில் பஞ்சபுராணமும், அபிராமி அந்தாதியும் ஒதப்பட வேண்டும்.
இறுதியாக நமது பண்பாட்டையும் வழிப்பாட்டு முறைகளையும் சரியாக பின்பற்றினாலே போதும், யாரும் நம்மை ஏமாற்றவோ, அல்லது தெரியாத சடங்கு முறைகளின் பதிப்போ நம்மை அண்டாது.

சிவாய திருசிற்றம்பலம்

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...