Friday 25 August 2017

No conversion / ஏன் இந்த மாற்றங்கள் தோழா!

ஏன் இந்த மாற்றங்கள் தோழா!

எவ்வளவு தான் விஞ்ஞானத்தால் நாம் உயர்வு பெற்றுந்தாலும் இன்னும் மெய்ஞ்ஞானத்தால் தெளிவு பெறமலே உள்ளோம் என்பது இன்றைய நடைமுறை வாழ்க்கையில் தினம் தினம்  கண்ணெதிறே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். இதற்கு பிறரை குறை கூறுவதை விடுத்து சற்று சிந்தித்தோமானால் புரியும். தவலை எப்படி தன் வாயால் கெடும் என்பரோ அப்படியே நாம் நம்மாலேயே கெடுகிறோம். இத்தொடரில் நான் முக்கியத்துவம் கொடுத்து பேசுவது மதமாற்ற பிரச்சனையை குறித்தே.
இன்று மலேசிய திருநாட்டை பொறுத்த வரையில், மதமாற்ற பிரச்சனைக்கு விடிவில்ல புதிராக தான் உள்ளது. ஒருமுறை நமது தாய் மதத்தை விட்டு மாறிவிட்டோம் என்றால் மீண்டு வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அவளநிலையில் உள்ளனர். நமது இந்து சமயம் என்பது முத்த சமயங்களில் ஒன்று. கல் தோன்ற மண் தோன்ற காலத்தின் மூத்த மொழி தமிழ் மொழி என்று தமிழை உயர்த்தும் போதே நமது சமயமும் மூத்தது தான் என்று தெரிய வருகிறது.
சுதந்திரத்தை அள்ளி கொடுத்த சமயம். எல்லாவுயிர்களிலும், எல்லா இடங்களிலும், நிக்கமற இறைவன் நிறைந்துள்ளான் என்று உரக்க சொன்ன மதம். கலைகளிலும் சமயத்தை புகுத்தியது இந்து சமயம். குடும்பத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் நமது இந்து மதம். நீர், காற்று, நெருப்பு, நிலம் மற்றும் ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களிலும் இறைவனை பார்த்தது நமது இந்து மதம்.
எத்துனை பெருமை, புகழ், வியக்கத்தக்க வைக்கும் சம்பவங்கள், வரலாற்றில் மீண்டும் படைக்க முடியாத கலை, கட்டிடங்கள், பாரம்பரியங்கள். எல்லாவற்றிலும் அறிவியலை புகுத்திய பண்பாட்டு சடங்கு முறைகள், மருத்துவ குணதிசயங்கள். ஒரே ஒரு வரியில் அடக்கிட முடியாத கடல். மூழ்கினால் மீள முடியாத ஆளம்.
ஆக இத்துணை பெருமைகளை கொண்ட சமயத்தில் பிறந்து முழுமையாக கற்று தெளியமல் மதம் மாறுவது எவ்வளவு கேவலம் தெரியுமா? மத மாற்றம் என்பது நாம் நம்மை பெற்ற தாயை அல்லது நமது சகோதரியை விலைக்கு விற்பதற்கு சமமான ஒரு கேவலமான செயலாகும். இவ்வளவு கொச்சையாக குறிப்பிட காரணம் வேதனையின் வெளிப்பாடே.
குரு வழிப்பாடு என்ற பெயரில் பண மோசடி, வழிபாடு என்ற பெயரில் அர்த்தமற்ற பிரார்த்தனைகள், என்று நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கிறோம் என்பதனை இன்னும் உணரமலே போய் கொண்டிருக்கிறோம்.
மதமாற்றம் செய்யப்படுவதன் நோக்கம் நம்மை மிதித்து அவர்கள் ஓங்கி நிற்கவே. மேலும், நமது ஏழ்மையை பிறர் பயன்படுத்தி லாபத்தை பார்க்கவும் இச்சம்பவங்கள் நடைபெறுகிறது. இதற்கு அவர்களை மட்டும் தவறு சொல்வது சரியில்லை. நமக்கும் பங்கு உண்டு என்றே சொல்வேன். காரணம் பிற மதத்தினர் நம்மை பொது இடங்களில் சமய கலை கலச்சார நிகழ்வுகளில் படம் எடுத்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் முன்னிலையில் நமது அன்பு வழிப்பாட்டு முறைகளும் விஞ்ஞானமிக்க சடங்கு முறைகளும் தென்படாமல், அகோர ஆட்டங்களும், கவரச்சி மிக்க காட்சிகளும், நமது சமயத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கும் வகையிலான காட்சிகளுமே தெரிகிறது. இதையே காரணமாக கொண்டு மத போதகர்கள், பிரச்சாரகர்களை அதிகப்படுத்தி மத மாற்றத்தை செய்ய துண்டுதல் செய்கிறர்.

ஆக நாம் நமது சமயத்தின் புனிதத்தை ஒரளவு தெரிந்து வைத்திருந்து இந்துவாக பிறந்தால் இந்துவாகவே மடிய வேண்டும் என்ற உறுதியோடு இருந்தால் எவரும் நம்மை மதமாற்றம் செய்ய துணிய மாட்டார்கள். இறைவழிப்பாட்டில் உறுதியும், சமயத்தின் மீதுள்ள அக்கறையுமே நமக்கு இறுதி வரை துணை புரியும்.  இப்பிரச்சனைகளை கழைய நமது பிள்ளைகளை சிறு வயது முதல் சமயத்தின் மீது அக்கறை கொள்ள செய்தல் அவசியம். ஆலயங்களுக்கு செல்லும் பழக்கத்தையும் சமய சொற்பொழிவுகளில் கலந்து கொள்வது, அன்பான வழியில் இறைவழிபாடு செய்வது போன்றவற்றில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளுதல் அவசியம். விதைப்பதை சரியாக விதைத்தால் அறுவடை செய்யும் காலத்தில் நல்ல பயனை பெறலாம். இதற்கு முன் நாம் நமது சமயத்தில் செய்ய தவறியவற்றை இப்பொழுது கூட செய்ய துவங்களாம். தடுப்பதற்கு யாருமில்லை.

1 comment:

  1. அருமையான பகிர்வு!!!! இந்து சமயத்தை நமது இளம் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். மதமற்றத்தைப் பகீரங்கமாக எதிர்க்க வேண்டும்.

    ReplyDelete

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...