Friday 22 September 2017

சம்ஹாரம் Samharam - மனிதனுள் இருக்கும் அரக்கனை அழிப்போம் Kill The Human Ashura

இந்து பெருமக்களின் விஷேச காலங்களின் அடிப்படையில் இன்று  நாடு தழுவிய அளவில் நாம் நவராத்திரி பண்டிகையை ஒன்பது நாட்களுக்கு கொண்டாடி கொண்டிருக்கிறோம். நவராத்திரியின் முக்கிய அம்சமே அம்பிகையின் ஒன்பது அவதாரங்களை பூஜித்து பத்தாவது நாளாக விஜய தசமியன்று மஹிஷசுரனை வதம் செய்யும் காட்சியை தொழுவதே ஆகும். மூன்று நாட்களுக்கு துர்க்கையாக, மூன்று நாட்களுக்கு லட்சுமியாக, மற்றும் மூன்று நாட்களுக்கு சரஸ்வதியையும் வழிப்படுவது வழக்கம்.

இந்த நவராத்திரி விழா பல உள் அர்த்தங்களை அடக்கியவை. ஆனால் அது பலருக்கும் தெரியாதவொன்று. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையம்மனை வழிப்படுகிறோம். துர்க்கையம்மன் என்பவர், வீரத்தினை தந்து நம்முள் இருக்கும் சோம்பலை அகற்றுபவர். அம்பிகை நம்மிடம் இருக்கும் தமோ குணத்தினை இங்கு அகற்றுகிறார். சித்தாந்தரிதியாக சொன்னால் நம்முள் இருக்கும் மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை போக்குகிறார்.

அதனை தொடர்ந்து, வரும் மூன்று நாட்களில் மகா லட்சுமி தேவியை வழிப்படுகிறோம். லட்சுமி தேவி செல்வத்தின் அதிபதி என்பது நாம் அறிந்தவொன்று. ஆனால் லட்சுமி தேவி நமெல்லாம் நினைப்பது போல் அவர் பணம் படைக்கும் தெய்வம் அல்ல. புகழ், மரியாதை, அன்பு, தனம், தானம், தான்யம் ஆரோக்கியம் ஆகிய செல்வங்களை வழங்குபவர். இந்த மூன்று நாட்களில் மகா லட்சுமி நம்முடைய இராஜச குணத்தை அழிக்கிறார். பேராசை, நம்மை பிடித்திருக்கும் பிணிகள் அனைத்தையும் அழித்துவிடுகிறார். அடுத்ததாக கல்வியின் அதிபதி சரஸ்வதி தேவிக்கு உகந்தவையாக இறுதி மூன்று நாட்கள் அமைகிறது. அன்று சரஸ்வதி தேவி நமக்கு சாத்விக குணத்தை அருளுகிறார். ஆக நவராத்திரியின் பத்தாவது நாளாக விஜய தசமியை நாம் கொண்டாடுகிறோம். அன்று முப்பெரும் தேவியர்களும் ஒன்று சேர்ந்து ஆதிபாரசக்தியாக உரு கொண்டு, மஹிஷசுரனை சம்ஹாரம் செய்கிறார்.

அன்பர்களே, பல யுகங்களுக்கு முன்பே அன்னை பராசக்தி மஹிஷசுரனை சம்ஹாரம் செய்துவிட்டார். பின் எதற்காக ஆண்டு தோறும் நாம் ஆலயங்களில் இந்த வழக்கத்தினை பின்பற்றி கொண்டிருக்கிறோம்? காரணம் அவ்வசுரனின் சாபம் நம்மை விடாது பிடித்து கொண்டு தான் வருகிறது. அச்சாபம் என்னவென்று தெரியுமா? பிறர் உடமைகள் மீது ஆசை கொள்ளுதல், ஆணவத்தில் முழ்கிவிடுவது, பேராசை, சுயநலம், குறிப்பாக நான் என்ற அகந்தை கொள்வது, என்று நம்முள் அரக்கன் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறான். அவனை அழித்து இந்த ஆன்மாவிற்கு தூய்ம்மையை கொடுப்பதே சம்ஹாரத்தின் தத்துவம்.

இப்புனித நாட்களில் நாம் அம்பிகையிடத்தில் எதை பிரார்த்திக்க வேண்டும் என்று அபிராமி பட்டர் அந்தாதியாக சொல்லியிருக்கிறார். அவை பின்வருமாறு

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வராத நட்பும் கன்றாத வளமையும்
குன்றாத இளமையும் கழுபினியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தனாமும் தாளாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கோடையும்
தொலையாத நீதியும் கோணாத கோளும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும், உதவி பெரிய கொண்டரோடு கூட்டு கண்டாய்
ஆளயாலில் அறிதுயிலும் மாயானது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே அமுதிசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே.

இதை கேட்டாலே போதும் அவள் நமக்கு நிச்சயம் தருவாள். கேட்பதை நாம் கேட்டுவிட்டோம். உமையவள் எதை நமக்கு கொடுப்பாள் தெரியுமா? அதையும் பட்டர் நமக்கு சொல்லித் தான் சென்றார். அவை பின்வருமாறு
தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே
ஆக இறைவனிடத்தில் நாம் கேட்பது இதனை தான் அவன் தருவதும் இதனை தான். இதையே தான் வள்ளாலரும் நம்மிடத்தில் வலியுறுத்துகிறார். அவை பின்வருமாறு
ஒருமையுடன் நின்திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு களவாமை வேண்டும்
பெருமை பெற நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசதிருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்,
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.
மருவு பெண்ணாசை மறக்கவே வேண்டும், உன்னை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தர்மம் மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தளம் ஒங்க கந்த வேலே
தன்முகத் துய்யமணி உன்முக சைவமணி சண்முக தெய்வமே.

என்று அவரும் தெளிவுபடுத்தி தான் சென்றுள்ளார்.

ஆக இறைவனிடத்தில் கேட்க வேண்டியவற்றை முறையாக கேட்க வேண்டும். அத்தோடு நம்முடைய வழிப்பாட்டின் தத்துவங்களை அறிந்து வழிப்படுவது சிறப்பு. அதுமட்டுமின்றி, நமக்கு தெரிந்தவற்றை நமது பிள்ளைகளுக்கு போதித்தல் அவசியம். நம்முடைய பண்பாட்டை அழிவிற்கு கொண்டு போகாமல் அவற்றை நம் சந்ததியினருக்கு போதித்து வளர்ப்போம்.


Thursday 14 September 2017

Blue Whale Game - நீல திமிங்கிலம்


இன்று நாட்டையே பயத்தில் ஆழ்த்தி கொண்டு பரவலாக பரவி கொண்டு வரும் உயிர்க் கொள்ளியான இணையத்தள விளையாட்டு நீல திமிங்கிலம். இளைஞர்களையும், குழந்தைகளையும் தற்கொலைக்கு துண்டும் அதிபயங்கரமான விளையாட்டாகும். இந்த விளையாட்டு 50 சவால்களை கொண்டது. இதை விளையாடுவோர் ஒவ்வொரு சவால்களையும் நிறுத்தாமல் தொடர்ந்து கட்டாயமாக விளையாடிட வேண்டும் என்பது இதன் விதிமுறைகளில் ஒன்று. இவ்விளையாட்டு பெற்றோரின் கவனிப்பு குறைந்தவர்களையும், அன்புக்காக ஏங்கி கொண்டிருப்போரையுமே தாக்கி விளையாட செய்யும்.
இனி இந்த விளையாட்டைப் பற்றி விரிவாக பார்ப்போம். இந்த விளையாட்டு, dowloadable game, application and software இல்லை. இவை ரகசியமாக பரவி வரும் குழுமங்களின் வழி விளையாடப்படுபவை. இவ்விளையாட்டின் துவக்கமாக russian social media network -ல் முதன் முதலில் கண்டறியப்பட்டதாக ஒரு கட்டுரை நமக்கு சான்றாக கிடைப்பெறுகிறது. இதில் 50 சவால்கள் அடங்கியிருக்கும். அவற்றில் அதிகாலை 4:20 எழுந்து பேய் படம் பார்ப்பதும், கைகளை அறுத்து கொள்வது, குடும்பம் நண்பர்களிடமிருந்து தனித்திருப்பது, மலை உச்சியிலிருந்து தற்கொலை முற்ப்படுவதுமாகவே இதன் சவால்கள் அடங்கியிருக்கும். ஒவ்வொரு சவால்களுக்கு பிறகும் சவால்களை நிறைவேற்றியதற்கான சான்றுகளை காண்பிக்கும் வகையில் படம்பிடித்து பதிவேற்றம் செய்தல் அவசியம்.
இந்த விளையாட்டில் பங்கு கொள்வதற்கு முன்பதாக நம்மை பற்றிய தகவல்களை பற்றி முழுமையாக நம்மிடமிருந்து பெற்று கொள்ளும். அதன் பின்னர் தான் நமக்கு ஒவ்வொரு சவால்களாக கொடுக்கப்படும். இதன் நோக்கமே நம்முடைய மரணம். இதில் இருக்கும் சவால்களை பூர்த்தி செய்ய முடியாது நாம் பின் தங்கினால் நம்மை பற்றிய விஷயங்களை காட்டி பயமுறுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு ஆய்வின் கீழ் வெளிவந்த தகவலின் படி நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலையில் ஈடுப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.
நம்மை சுற்றியிருக்கும் சிறுவர்களோ, தம்பி தங்கைகளோ, நண்பர்களோ இந்த விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளனர் என்பதை நாம் எப்படி அறிந்து அவர்களை அதிலிருந்து மீட்டு வருவது?
உங்களோடு சேர்ந்து இருப்போர்களின் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள். அவர்களின் நடவடிக்கையின் மீது சந்தேகியுங்கள். தனிமையிலிருப்பது, உடலில் வெட்டு காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பது போன்றவையை கண்காணியுங்கள். அப்படி இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே காவல் அதிகாரியிடம் புகார் கொடுப்பதும், மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனைகள் பெறுவதும் சிறந்த தீர்வுகளாகும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிக கண்காணிப்பு கொள்வது அவசியம். பிள்ளைகள் இந்த விளையாட்டில் அதிகமான கவனத்தை செலுத்துகின்றனரா என்பதை கண்காணிப்பது மிகவும் முக்கியம். அப்படி அவர்கள் மீது  உள்ள சந்தேகம் உறுதியானால் வீட்டில் உள்ள இணையத்தள இணைப்பை ரத்து செய்யுங்கள். அவர்களை அந்த விளையாட்டின் தக்கத்திலிருந்து மீட்க முயற்சியுங்கள்.
2015 - ஆம் ஆண்டு இந்த விளையாட்டை கண்டு பிடித்த நபர் பிடிப்பட்டார். அவரை விசரித்த போது அவர் சொன்னதாவது, "இந்த உலகை தூய்ம்மைப் படுத்துவது தான் என் நோக்கமாகும்" என்றார்.
இறுதியாக இப்பதிவின் வழி கூற வருவது  என்னவென்றால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தத்தம் கவனிப்பிலிருந்து விடுப்படமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும். இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுப்படாமல் இருக்க நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். நமக்கு பயனலிக்கும் வகையிலான காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இதுவே சரியான தீர்வாகும்.


Wednesday 13 September 2017

இந்து சமயத்திற்கு ஏன் இத்துணை துயரங்கள்

சமீபத்தில் வளைத்தளங்களில் அடியேன் கண்டு அதிர்ச்சியுற்ற சம்பவம் ஒன்றை இங்கு பகிர்கிறேன். பக்தியேன்ற பெயரில் பலரும் பல விதமாக தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தி வந்தாலும் அவற்றில் சில நம் சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதை கண்டு மனம் வேதனை கொள்கிறது. இப்பொழுது நான் கண்ட சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் பெண்கள் தங்களை அம்மனின் சொரூபமாக மாற்றி கொண்டு அங்காரமாக கூச்சலிட்டு கொண்டும் பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.
பெண்கள் பொதுவாக அம்மனுக்கு ஒப்பானவர்கள் தான் அதில் என்ற மாற்றமும் இல்லை. ஆனால் இவர்கள் நடந்து கொள்ளும் செய்கையை பார்த்தால் நம் சமய நம்பிக்கைக்கு அவமானத்தை ஈட்டித்தருவதாக இருக்கிறது. நாம் கற்றும் முட்டாள்களாக திரிகிறோமோ? அன்பின் வழி இறைவனை அடைந்திட தான் நம் சமயக் குரவர்கள், நாயன்மார்கள், மற்றும் அருளாளர்களும் போதித்துள்ளனர். பெரியப்புராணத்தில் கூட நாயன்மார்கள் இத்துணை பக்தியில் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தவில்லை.
காலங்களின் தாக்கத்தால் மூடர்களின் அர்த்தமற்ற போதனைகளால் இது போன்ற காரியங்கள் இன்னும் நமது சமுதாயத்தில் நடந்து கொண்டு தான் வருகிறது.
இதுமட்டும் தான் சமயத்தை சீர்குழைய செய்கிறது என்பது  என் கருத்து அல்ல. இன்னும் பல உண்டு. பைரவர் வழிப்பாடு என்று காய்கறிகளால் விளக்குகள், குரு வழிப்பாடு என்று பண மோசடி, கடவுளுக்கு நிகரான யாக வேள்வி வழிப்பாடுகள், ஜோதிட பரிகாரங்கள் என்று இன்னும் பல மூட்டாள் தனமான காரியங்கள் அங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.



இந்து சமயத்தில் போதிக்கப்பட்ட வழிப்பாட்டு முறைகள் அத்தனையும் விஞ்ஞானத்திற்க்கும் மெய்ஞ்ஞானத்திற்க்கும் ஒத்து போகும் வகையில் அமையப் பெற்றவை. இன்றும் விஞ்ஞானிகளும், அறிவியல் நிபுணர்களும் நமது சமய சம்பிரதாயங்களை ஆராய்ந்து அவை உலகிற்கு எல்லா காலங்களிலும் பல நன்மைகளை வழங்க கூடியதாகத்தான் உள்ளது என்று சான்றுகள் காட்டப்பட்டு வருகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் மூடநம்பிக்கையில் தோன்றும் சம்பிரதாயங்களுக்கு இவர்களால் தகுந்த விளக்கமளிக்க முடியுமா? மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று முழக்கமிட்டால் மட்டும் போதாது. அதற்கான முயற்சியில் முழுமையாக இறங்கி செயல் பட வேண்டும். உண்மையான பக்தி மார்க்கத்தை முழுமையாக கைப்பற்றல் வேண்டும். சனதான தர்மத்தை தெளிவுப்படுத்தி கொள்ள முற்ப்படுவது அவசியமாகிறது. சரியான இந்து சமயத்தை கற்று தெளிந்து விட்டால் எவராலும் நம்மை மூடர்களாக்கி விட முடியாது என்பதை எப்பொழுதும் சிந்தையில் கொண்டிருப்பது சிறப்பு.

Tuesday 12 September 2017

வள்ளி திருமணம்



சிவாய திருச்சிற்றம்பலம்

இன்று வரை நாம் அனைவரும் முருக கடவுளை வருணித்து சொன்னால், அவர் இரண்டு மனைவிக்கு சொந்தக்காரர் என்ற ஒரு தவறான கருத்தை தான் முதலில் முன் வைக்கிறோம். ஆனால் முருக கடவுளின் புராண வரலாற்றை சற்று ஆழமாக சிந்தித்து படித்தால் அதில் இருக்கும் எத்தனையோ தத்துவக் கூற்றை அறிய முடியும். என்னுடைய இந்த பதிவில் வள்ளி திருமணத்தை பற்றியும் அதிலிருக்கும் தத்துவங்களை நான் கற்ற வரை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இன்றைய காலத்திற்கு ஏற்ற கருத்துக்களை அன்றே நமது முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றிருந்தாலும் நாம் அவற்றை பின்பற்றமலே போய் விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு புராண வரலாற்றை இங்கு சொல்கிறேன். திருவிளையாடற் புராணத்தில் சிவப் பெருமானே எழுதிய பாடல் ஒன்றுக்கு நக்கீரர் பொருள் குற்றம் இருந்த காரணத்தினால் பாட்டில் பொருள் குற்றம் உள்ளது என்று வாதிட்டார். பெருமான் இல்லையென்று வாதித்தாலும் நக்கீரர் குற்றம் குற்றமே, நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தம் முடிவில் உறுதியாகவே இருந்தார்.
இதில் நாம் அறிவது என்ன தெரியுமா?
இறைவனே குற்றம் செய்தாலும், குற்றம் குற்றம் தான். அவன் இறைவன், அவன் செய்தது சரி என்று வாதிப்பது சரியல்ல, என்ற தத்துவத்தினை முன்வைத்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்று லஞ்சம் என்ற பெயரில் பல உண்மைகள் முடி மறைக்கப்பட்டு தான் வருகிறது. எவ்வளவு தான் மறைத்தாலும் ஒரு நாள் உண்மைகள் வெளி வரத் தான் செய்யும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

மேலே கூறிப்பிட்டது போல் வள்ளி திருமணத்தின் தத்துவங்களையும் கற்று தெளிதலை அவசியமாக கொள்ளுதல் வேண்டும். இனி புராண வரலாற்றை பார்ப்போம்.
வள்ளி பிராட்டி என்பவர் ஒரு மானுக்கு பிறந்த பெண் குழந்தை. அதுவும் மனித உடலோடு பிறந்த குழந்தை. பிறந்த குழந்தை தன்னுடையதல்ல என்று மான் இருந்த இடத்திலே குழந்தையை விட்டு போய் விட்டது. அதை கண்ட வேடுவர் குலத்தோன் அந்த  குழந்தையை தன் குழந்தையாக பேணி காத்து வளர்த்தார். முருக பெருமானுக்கு பூலோக மங்கையான வள்ளியின் மீது காதல் வயப்பட்டது. வேடுவனாக சென்று வள்ளியிடம் தன் காதலை சொன்னான், ஏற்று கொள்ளவில்லை. வயது முதிர்ந்த வயோதிகனாக வந்து அண்ணன் ஆனை முகன் துணையோடு  மணக்கலனார், என்பது நாம் அறிந்த புராண வரலாறு. இங்குதான் நாம் சற்றே சிந்திக்க வேண்டும். முருக பெருமான் எல்லா ஆற்றலையும் கொண்டவன். ஆசை, மோகம், பேராசை அனைத்திற்க்கும் அப்பாற்ப்பட்டவன். அவனுக்கு எப்படி இந்த காதல் வசப்பட்டது. அதுவும் ஒரு தெய்வத்திற்கு பூலோக மங்கை மீது எப்படி ஆசை வந்திருக்கும்.
அதுமட்டுமல்லாது, முருகனை புகழும் திருப்புகழிலும், வள்ளியின் மீது முருகனுக்கு இருக்கும் மோகத்தை  தான் அருணகிரியார் சொல்கிறார். இது எப்படி?
நண்பர்களே,
வள்ளி என்பவள் பிரதிநிதி. நமக்கெல்லாம் அவர் தான் பிரதிநிதி. அதிலும் முருகன் மட்டும் தான் ஆண்பிள்ளை. ஆனால் நாம் எல்லோரும் பெண்ணால் பெற்றேடுக்கப்பட்ட பெண் பிள்ளைகள். பாலால் ஆண், பெண் என்று வேறுப்பட்டாலும் நாம் அனைவரும் பெண் பிள்ளை தான். ஆக முருக பெருமான் காதல், மோகம் கொண்டிருப்பது நம் மீது தான் என்பதை மறக்கக் கூடாது. முன்பு நான் சொன்னது போல் வள்ளியம்மை நமது பிரதிநிதி. அவன் வள்ளியிடம் காட்டும் அன்பு நம்மிடம் கொள்ளும் காதலாகும்.அதனால் தான் அருணகிரிநாதர் பல இடங்களில் வள்ளியின் மீது முருகனுக்கு உள்ள அன்பையும், காதலையும் சொல்கிறார். இதன் வழி, நம்மிடம் இறைவன் கொண்டுள்ளான் என்பதை உணர முடியும். அப்படி வள்ளியம்மையை போற்றும் வரிகளை நாம் இங்கு பார்ப்போம்.
1.         வள்ளியம்மை தவிர வேறு தஞ்சம் தமக்கு இல்லை என்று முருகவேள் தமது வேளையை (பொழுதை) அம்மையாருக் கென்றே போக்கினார் என்று          - திருப்புகழ் 1000
2.         உன் குழை ஒழையை தா. அந்த ஒழையில் உன் கண்கள், தனங்கள் முதலியவற்றால், நான் மனந் தளர்ந்து பரிதாப நிலையில் உள்ளேன் என்று சாசனம் (பத்திரம்)  எழுதி தருகின்றோம் என்று வள்ளிப் பிராட்டியிடம் முருக வேள் கூறியது          - 1002
3.         வள்ளியம்மையின் உறைவிடமாம் காட்டுக்கும் ஒர் அடிமை கும்பிடு போடும்படி வள்ளிப்பாற் காதல் மயக்கம் கொண்டார் முருகவேள் என்பது                         - 1151
4.         வள்ளியம்மைக்கு வழியடிமை யான் என்று முருக பிரான் மேருமலையிற் சாசனம் எழுதி வைத்தனர் என்பது   -1199
            - அருணகிரியாரும் வரலாறும் நூலாராய்ச்சியும், டாக்டர் வ.சு.செங்கல்வராயப்பிள்ளை
அவர்களின் நூலில் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். இவை மட்டுமின்றி முருகப்பெருமான் செய்த மற்றுமொரு காரியம் உண்டு. அதனை அருணகிரியார் அழகு தமிழில் கொஞ்சி சொல்கிறார்.
" பாகு கனிமொழி மாது குறமகள்
                                                            பாதம் வருடிய                       மணவாளா"

என்ற இந்த ஒரு வரியினால் வள்ளி முருகனின் பெருமையை உயர்த்திவிட்டார் அருணகிரியார். கழைப்பால் துயல் கொண்டிருந்த வள்ளிக்கு பாதம் பிடித்துவிட்டு பணிவிடை செய்வதாக பொருள்படும் இவ்வரிகளில் முருக கடவுள் நம்மிடம் கொண்டிருக்கும் அன்பினை எவ்வளவு எழிமையாக சொல்லியுள்ளார்.

இதன் வழி நாம் அறிவது என்னவென்றால் இறைவன் என்பவன் எல்லா நிலைகளிலும் நம்மிடம் அன்பினை செலுத்தி கொண்டு தான் இருக்கிறான். ஆனால் நாம் தான் அவன் பெயரால் தவறுகளையும் பெறும் பாவங்களையும் செய்து உண்ட வீட்டிற்கு தூரோகம் விளைவிப்பதாக நடந்து கொள்கிறோம். வசதிகளும், பதவிபட்டங்களாலும் நாம் உயர்ந்தவர் என்ற எண்ணத்தை விடுத்து ஏழ்மையை கை கொள்ளுவோம். இறைவன் நமக்கென்று கொடுக்க வேண்டியதை தக்க சமயத்தில் தருவான்.

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...