Monday 19 November 2018

Is poverty a mess?


For a few hours with lovable relationships,

In today's time, many of us do not seem to be progressive because of the poor. It is rare for us to see how high our people are, even if the state of the country is raising them up and giving them opportunities.

Dr. APJ Abdul Kalam will surrender from the curse of poverty with a weapon of education to comply with their vote. But in the hands of the knowledge of the knowledge we are not going to know somewhere. The consequences of our society are going to be guilty. According to a recently published survey, from 55% percent of SPM students 44% of Indian students in the SPM exams getting a good result.

In fact, 13% of Indian students stop studying at primary school. At secondary school, 8% of students leave school in half. Only 4.5% of Indian students apply for higher education.

Guys, we need to raise the burden of those who are below us when we rise to the education of the education. We're still in the lowest position today because we're going on what's going on. We're just talking about the shortcomings. Dr. APJ Abdul Kalam, as they say, has been allocated to one side of the pages of history for everyone born in this world. But it is in our hands to read the world that page.
During creation, God did not create anyone in the sense of money, position, and nobleman. By the time their work is done by knowledge and knowledge. If you are rich or poor, you will be hungry if you eat it. It's like dreaming to be in everyone. We must try to achieve that.

A message from Saint Thiruvalluvar is the same,
If one is born (in this world), one had better shine forth with fame; it is better that one, who does not have fame, is not born, than be born.

Again in a good time ...
Vickraman Ponrangam


Friday 9 November 2018

கந்த சஷ்டி விரத சிறப்பு Skanda Sasti Article 2


கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் 
நற்றுணையாவது நமச் சிவாயவே

கந்த சஷ்டி விரததின் மறு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்வதோடு முருகனின் திருவருள் கிட்டி வாழ பிராத்திக்கிறோம்.
இப்பதிவில் கந்த சஷ்டி விரதத்தின் பலன் யாதென்பதை காண்போமாக.
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை
கந்தனுண்டு கவலையில்லை, குகனுண்டு குறைவில்லை என்பர்.

ஆக கந்த வேலை உருகி இந்த கந்த சஷ்டி விரத்தினை அனுஷ்டிப்பதால் நம்மை சுற்றியிருக்கும் தீமைகள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வில் உய்வடைவோம் என்பதுவே இவ்விரத்தின் முக்கிய அம்சமாகும். இவ்விரத்தை சுட்டி காட்டி நமது முன்னோர்கள் அருள் மொழியாக பழமொழியினையும் நமக்கு சொல்லி சென்றுள்ளனர் என்பது கூறிப்பிட தக்கது. சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் வரும் என்று. அதாவது கந்த சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பை என்னும் கருப்பபையில் குழந்தை என்னும் செல்வம் என்பது வரும்.

அதுமட்டுமல்லாது, நம்மை துன்புறுத்தி கொண்டிருக்கு நவக்கிரக தோஷங்கள், மரண பயம், வறுமை, தீராத உடல் நோய் யாவையும் தீர்க்கவல்ல அற்புதம் நிறைந்த விரதமே கந்த சஷ்டி விரதமாகும்.
திருமுருக கிருபனந்த சுவாமிகள் எப்பொழுதும் முருகனை ஒரு வாசகத்தில் பின்வருமாறு சுட்டி காட்டுவார்கள் "கேட்ட போதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் பன்னிரு கரங்களினால் வாரி தரும் வள்ளல் முருகப்பெருமான். அப்படி வாரி வழங்கும் வள்ளலுக்கு ஏற்ற மனைவியாம் வள்ளி. அதனாலேயே அவர்கள் வள்ளல் வள்ளி என அன்போடு அழைக்கப்படுகிறர்".
துன்பங்கள் சூழ்ந்து கொண்டு கண்ணை இருட்டிக்கும் போது துணையாக ஒரு தேடல் வேண்டும் என்றால் அழைப்பின்றி வருபவன் முருகன்.
அதனையே அருணகிரிநாதர் பாடுகிறார்

மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் 
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.  

என்று முருகப்பெருமானின் தனிப்பெரும் கருணையினை விளக்குகிறார். அதிலும் வள்ளியென்னும் மானுட பெண்ணின் மீது முருகன் வைத்திருக்கும் காதலினை அருணகிரி அழகாக வெளிப்படுத்துகிறார். நம்மில் ஒரு அங்கமாக இருக்கும் வள்ளி அம்மையார் மீதுள்ள பக்தியினை பல பாடல்களிலும் அருணகிரிநாதர் வெளிப்படுத்துகிறார். எடுத்துகாட்டாக,

பாதி மதி நதி போது மணிசடை 
                            நாத ரருளிய .... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள் 
                                 பாதம் வருடிய ... மணவாளா

என்று சிவப்பெருமானின் நெற்றி கண்ணிலிருந்து உதிதெழுந்த முருகன் வள்ளி என்ற மானுட குறத்தியின் காலை வருடி விடுகிறார் என அழகு தமிழில் சுவை குறையாது சொல்லியுள்ளார். ஆக நமக்கு துன்பம் வந்தாலும் அவற்றை தனதாக்கி காப்பாவன் முருகன் என்பதுவே இதன் பொருளாக கொள்ளலாம்.

மேலும் அடுத்த பதிவினில் கந்த சஷ்டி விரதத்திற்கு மூலமாக இருக்கும் கந்த சஷ்டி கவசத்தின் சிறப்பினை காண்போமாக.

விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்

கந்த சஷ்டி விரத சிறப்பு Skanda Sasti Article


கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் 
நற்றுணையாவது நமச் சிவாயவே

திருமுருக பெருமானின் விழாக்களிலும் சரி விரதங்களிலும் சரி முருகன் அடியார்களுக்கு மிகப் பெரிய பக்தியை தரவல்லது என்றால் அது கந்த சஷ்டி விரதமே ஆகும். சூரபத்மனை சம்ஹாரம் செய்விக்கும் உன்னத திருநாளே இந்த கந்த சஷ்டி விரதமாகும். இந்த பதிவில் நான் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கும் முறையினை பற்றி விளக்குகிறேன் பின்னர் தொடர்ந்து வரக்கூடிய பதிவுகளில் இவ்விரதத்தின் மற்றும் பல சுவை மிகுந்த செய்திகளை பகிர்கிறேன்.

பொதுவாகவே கந்த சஷ்டி விழா திருசெந்தூர் முருகன் ஆலயத்திலே மிகவும் விமரிசையாக கொண்டாட படுவதோடு சகல முருகன் திருத்தலங்களிலும் ஆறு நாட்களுக்கு விசேஷமாக நடத்துவது வழக்கம். இந்த விரத்தினை அனுஷ்டிப்போர் உண்ண நோன்பினை மேற் கொள்ள வேண்டும் என்பது விரத முறையின் கோட்பாடு. இருப்பினும் முடியாத பட்சத்தில் உள்ளவர்கள் புலால் உண்ணாது மரக்கறி உணவினை உட்கொண்டு கடைப்பிடிப்பது மிக அவசியம். இதுவே விரதத்தின் முதல் கட்டு. கட்டு என்பது நம்மை ஒழுக்க நெறிக்குள் கட்டுப்படுத்தி கொண்டு இருப்பது.

ஒரு கட்டுப்பாட்டுக்குள் நம்மையும் நமது மனத்தினையும் வைக்காவிடில் ஒழுக்கம் தவறிய வாழ்க்கையை வாழ்வதோடு பல இன்னல்கள் நம்மை சூழ்ந்து கொள்ள நாமே வழிவிட்டதாக போய்விடும். விரத காலங்களில் புலால் உண்ணாதிருக்க வழியுருத்து வதன் முக்கிய நோக்கம் யாதெனில் ஒர் உயிரை கொன்று அதனை புசிப்பதென்பது நமது சமயத்தில் சொல்லப்படாத கூற்றாகும். இது பக்தி நெறிமிக்க ஒரு இந்துவுக்கு பொறுந்தாத ஒன்றாகும்.
ஆக இந்த கந்த சஷ்டி விரதத்தின் போது உடலை வருத்திக் கொண்டு யாரையும் விரதம் இருக்க இறைவன் ஆணையிடவில்லை. இருந்த போதிலும் கந்த சஷ்டி விரதம் மற்ற விரதங்களுக்கு எல்லாம் அப்பால் சற்று மாறுப்பட்டதாகும். இந்த விரத்தினை பல்வேறு வகையாக அனுஷ்டிக்கலாம்.

  • விரதம் துவங்கும் முதல் நாள் காலை பக்தியோடு நீராடி காலையில் பால் பழம் உண்ட பின்னர் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு உணவு ஏதும் இன்றி இருப்பது ஒருவகை விரதம்.
  • பால் பழம் தவிற வேறு ஆகாரம் இன்றி இருப்பது ஒருவகை விரத முறையாகும்.
  • இன்னும் சிலர் மிளகு விரதமும் இருப்பர். முதல் நாள் ஒரு மிளகு சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்துவர், வேறு ஆகாரம் ஏதுமில்லை. பின்னர் இரண்டாம் நாள் இரண்டு மிளகு நீர். இவ்வாறு நாளின் எண்ணிக்கையில் மிளகினை உண்டு தண்ணிர் மட்டுமே அருந்தி விரதம் கடைப்பிடிப்பர்.

இவ்வாறு ஐந்து நாட்களுக்கு விரதம் இருந்து ஆறாவது நாள் கந்த சஷ்டி விரத்தின் போதாவது முடிந்த வரை உண்ணா நோன்பிருப்பது வெகு சிறப்பாகும். மாலையில் சூரன் சம்ஹாரம் செய்த பின்னர் பால் பழத்தினை உட்கொள்வது உகந்தது ஆகும்.

விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...